நாடு முழுவதும் ஒரே கல்வித் திட்டம்: உச்ச நீதிமன்றம் விசாரிக்க மறுப்பு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா தாக்கல் செய்த பொதுநலன் மனுவில், ‘குருகுலம் முறையிலான பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் அரசு பணிகளுக்கு செல்லும்போது, இந்த படிப்பை ஒரு தகுதியாக எடுத்துக் கொள்ளப்படுவது இல்லை. அதே நேரம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்கள், கிறிஸ்தவ அறக்கட்டளைகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த வாய்ப்புகள் வழங்கப்படுகிறது. எனவே, இது போன்ற கல்வி நிலையங்களில் நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்வித் திட்டத்தை கொண்டு வர வேண்டும். மேலும், 6 வயது முதல் 10 வயது வரையிலான காலக்கட்டம் குழந்தைகளின் வாழ்வில் மிக முக்கியமான தருணம். இந்த நேரத்தில் இத்தகைய கல்வி முறைகளை போதிப்பது, மத உணர்வுகளை ஏற்படுத்துகிறது,’ என கோரினார்.  நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கை விசாரிக்க மறுத்த நீதிபதி, ‘வேண்டும் என்றால் உயர் நீதிமன்றத்தை மனுதாரர் அணுகி கோரிக்கை வைக்கலாம்,’ என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்….

Related posts

திருப்பதியில் ரூ.13.45கோடியில் சமையற்கூடம் திறப்பு

வேலையின்மை எனும் நோயை பாஜக பரப்பியுள்ளது: ராகுல்

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு விவகாரம் : அக்.24ம் தேதி செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்