நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போட இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு

 

பந்தலூர், மார்ச் 21: நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மீண்டு ஆ.ராசாவை தலைமை கழகம் அறிவித்துள்ளதால் மகிழ்ச்சி தெரிவித்து பட்டாசுகள் வெடித்து திமுகவினர் உட்ஷாகம் அடைந்தனர். நீலகிரி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக ஆ.ராசாவை மீண்டும் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தும், வேட்பாளர் ராசாவிற்கு வாழ்த்து தெரிவித்தும் நேற்று நெல்லியாளம் நகர திமுக சார்பில் பந்தலூர் பஜாரில் நகர செயலாளர் சேகர் தலைமையில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். முன்னாள் தலைமை செயற்குழு உறுப்பினர் திராவிடமணி, மாவட்ட வழக்கறிஞர் அணிஅமைப்பாளர் சிவசுப்பிரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி கணபதி, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ஜெயசீலன், ஞானசேகர், குமார், கூடலூர் சட்டமன்ற தொகுதி ஐடிவிங் அமைப்பாளர் பாலா, நகர ஐடிவிங் அமைப்பாளர் சாந்தி உள்பட பலர் கலந்துக்கொண்டனர்.

 

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை