நவ்வலடியில் கிராம கண்காணிப்பு குழு கூட்டம்

திசையன்விளை, செப்.24: உவரி காவல்நிலையத்திற்கு உட்பட்ட நவ்வலடி ஊராட்சியில் கிராம கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. உவரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகளை தலைமை வகித்தார். விஏஓ சாம்ராஜ் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் ராதிகா சரவணகுமார் வரவேற்றார். கூட்டத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விழிப்புணர்வு கருத்துகள் குறித்தும், காவல்துறைக்கும் பொதுமக்களுக்குமான நல்லுறவு குறித்தும் இன்ஸ்பெக்டர் சிவகலை பேசினார். தொடர்ந்து கண்காணிப்பு குழு உறுப்பினர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கப்பட்டது. பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related posts

வார்டு குழு அலுவலக அறிவிப்பு பலகையில் மாநகர சாலையோர வியாபாரிகள் பட்டியல்: மாநகராட்சி கமிஷனர் தகவல்

வௌிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடி: லட்சக்கணக்கில் பணத்தை இழந்த இளைஞர்கள் கலெக்டரிடம் மனு

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம்