நல்லூரில் இன்று எருதுவிடும் விழா

 

வேப்பனஹள்ளி, ஏப்.26: வேப்பனஹள்ளி அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் இன்று(26ம்தேதி) எருது விடும் திருவிழா நடைபெற உள்ளது. இதற்காக எருதுகள் ஓடும் பகுதி மற்றும் பார்வையாளர்கள் அமரும் பகுதி ஆகியவற்றில் மரத்தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில் நேற்று விலங்குகள் நல வாரிய உறுப்பினர் மற்றும் தமிழக பொறுப்பாளர் மிட்டல், நல்லூர் கிராமத்திற்கு வந்து விழா ஏற்பாடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு அம்சங்களை அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து அதிகாரிகள் மிட்டல் சொன்ன பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும்படி விழா குழுவினருக்கு அறிவுரை வழங்கினர். அவர்கள் அப்பணிகளை மேற்கொண்டனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை