நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்

சிவகங்கை, ஜூன் 9: திருநங்கைகள் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஏதுவாக, ஜூன் 21அன்று சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில் ஒரே நாளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிடும் பொருட்டு சிவகங்கை மாவட்ட சமூக நலத்துறை மற்றும் இதர நலத்திட்ட சேவைகள் வழங்கும் துறைகளின் சார்பில் ஜூன் 21 அன்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக மாவட்ட வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் திருநங்கைகளுக்கான ஒரு நாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாமில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கைகள் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகிய நலத்திட்ட சேவைகளைப் பெற உரிய சான்றாவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இம்முகாம் தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு 04575 240426 என்ற தொலைபேசி எண்ணிலோ அல்லது 88838 67926 என்ற எண்ணிலோ தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து