சென்னை: தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நரிக்குறவர் இன மாணவி வீட்டிற்கு சென்று காபி, இட்லி நாட்டுக்கோழி குழம்பு ஊற்றி சாப்பிட்டார். அந்த மாணவிகள் அன்போடு அளித்த பாசி மணியை அணிந்து கொண்டார்.முதல்வர் இட்லி சாப்பிடும் முன்பாக அருகில் இருந்த குழந்தைக்கு இட்லியை ஊட்டி விட்டு மகிழ்ந்தார்.