நரிகளிடம் இருந்து கால்நடைகளை பாதுகாக்க வேண்டும்

மல்லசமுத்திரம், ஜூன் 21: திருச்செங்கோடு தாலுகாவில், நேற்று முன்தினம், தமிழக முதல்வரின் உங்களை தேடி உங்கள் ஊரில் என்ற சிறப்பு முகாம் நடந்தது. முகாமில், மல்லசமுத்திரம் அருகே அத்தப்பம்பட்டி பகுதியை சேர்ந்த விவசாயி சீனிவாசன் என்பவர், கலெக்டர் உமாவிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: மல்லசமுத்திரம் அருகே, கொளங்கொண்டை பஞ்சாயத்து அத்தப்பம்பட்டி பகுதியில் வசித்து வருகிறேன்.

10 ஏக்கர் விவசாயநிலத்தில் பயிர் சாகுபடி செய்து வருகிறேன். தோட்டத்தில் ஆடுகள், கோழிகள் வளர்த்து வருகிறேன். கோழிகளை நரிகள் அடிக்கடி கடித்து குதறி சேதப்படுத்தியுள்ளது. கடந்த 17ம் தேதி காலை 7 மணிக்கு, 3 நரிகளை பார்த்தேன். எனவே, நரிகள் மீண்டும் கால்நடைகளையும், மனிதர்களையும் தாக்காமல் இருக்க, தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை