‘‘நமீதா பேச்சுக்கு கை தட்டுங்கப்பா’’ பிரசாரத்தில் கெஞ்சிய பாஜ நிர்வாகிகள்

நாகர்கோவில்: தேசிய கட்சியான பாஜவுக்கு ஓரளவு வாக்கு வங்கி உள்ளதென்றால் அது கன்னியாகுமரி மாவட்டத்தில் தான்.  பாஜவுக்கு ஆதரவாக கடந்த வாரத்தில் காமெடி நடிகர் செந்தில், சின்னத்திரை நடிகை ஜெயலட்சுமி ஆகியோர் பிரசாரம் செய்தனர்.இந்த நிலையில் பிரபல நடிகை நமீதா, கன்னியாகுமரி மக்களவை தொகுதி பாஜ வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணன், அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரம் ஆகியோரை ஆதரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். கன்னியாகுமரி தொகுதிக்கு உள்பட்ட ஈத்தாமொழியில் நேற்று அவர் வாக்கு சேகரித்தார். அப்போது பாஜ நிர்வாகிகள் சகட்டுமேனிக்கு அவருடன் செல்பி எடுத்துக் கொண்டனர். நமீதாவும் சற்றும் சளைக்காமல் செல்பிக்கு போஸ் கொடுத்தார். அதன் பிறகு மைக்கை பிடித்தார் நடிகை நமீதா. மத்திய மந்திரியாக இருந்த பொன் ராதாகிருஷ்ணன் குமரிக்கு கொண்டு வந்த திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். ஆனால், கூட்டத்தில் எந்த ரெஸ்பான்சும் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பாஜ நிர்வாகிகள், ஒரு கட்டத்தில் மனம் நொந்து ‘‘யப்பா நமீதா என்னமா பேசுறாங்க… கைதட்டுங்கப்பா… இதையெல்லாம் கேட்டா வாங்க முடியும்’’ என்றனர்.  உடனே கூட்டத்தில் இருந்தவர்கள் போனால் போகிறது என்று கைதட்டினர்….

Related posts

சென்னையில் செல்லப்பிராணி வளர்ப்போர் அடுத்த மூன்று மாதத்திற்குள் ஆன்லைன் உரிமம் பெற மாநகராட்சி உத்தரவு

தமிழ்நாட்டில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

நிலக்கடலை சாகுபடியில் அதிக மகசூலுக்கு முக்கிய தொழில்நுட்பம்