நன்னடத்தை விதி மீறிய ரவுடிக்கு 247 நாள் சிறை

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை, ஜெ.ஜெ.நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பிரவீன் (25). இவர் மீது 2 கொலை முயற்சி வழக்கு உள்பட 5 வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் முன்பு ஆஜரான பிரவீன், திருந்தி வாழப்போவதாக நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி கொடுத்தார்.  ஆனால், அதை மீறி கடந்த நவம்பர் 28ம் தேதி ஆர்.கே.நகர் பகுதியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட இவரை ஆர்.கே.நகர் போலீசார் கைது செய்தனர். நன்னடத்தை பிணையை மீறி குற்றச் செயலில் ஈடுபட்டதால், பிரவீனை 247 நாட்கள் பிணையில் வரமுடியாதபடி சிறையில் அடைக்க வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் பவன்குமார் ரெட்டி உத்தரவிட்டார். அதன்பேரில் பிரவீன் சிறையில் அடைக்கப்பட்டார்….

Related posts

மெரினாவில் ரேபிடோ ஓட்டுநரிடம் போலீஸ் எனக்கூறி, ரூ.500, செல்போன் பறித்த ஒருவர் கைது!

நாம் தமிழர் கட்சி பிரமுகரின் முதல் கணவருக்கு வெட்டு; 2வது கணவர் உள்பட 4 பேர் கைது

சென்னை உள்பட பல இடங்களில் கைவரிசை; ஐடி அதிகாரிகள் போல நடித்து பணம் பறித்த 8 பேர் கும்பல் திருச்சி சிறையில் அடைப்பு