நடைபாதை பிரச்சினையில் முதியவர் மீது தாக்குதல்

வேடசந்தூர், ஜனவரி.23: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா மொங்குபித்தான்பட்டியை சேர்ந்தவர்கள் பொன்னுச்சாமி (வயது 70), பெரியசாமி (வயது 60). இவர்கள் இருவருக்கும் பாதை பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் பெரியசாமி மற்றும் அவரது மகள் ரேவதி (வயது 40) இருவரும் சேர்ந்து பொன்னுச்சாமியை தாக்கியதாக கூறப்படுகிறது. பொன்னுச்சாமி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து எரியோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை