நடுவானில் பறந்தபோது விபரீதம் விமானத்தில் புகைவிட்ட பயணி கைது

சென்னை: சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு அகமதாபாத்தில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் வந்து கொண்டிருந்தது. அதில் பயணம் செய்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்தீப் குமார் (34) என்ற பயணி, விமான கழிவறை அருகே சென்று சாவகாசமாக நின்று சிகரெட் பிடித்து, ரவுண்டு ரவுண்டாக புகையை வெளியே விட்டுள்ளார்.விமான பணிப்பெண்கள் வந்து எச்சரித்தும் கேட்காமல் மீண்டும் புகை பிடித்துள்ளார். இதுபற்றி விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். சென்னை விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்திற்குள் ஏறி புகை பிடித்த சந்தீப் குமாரை இருந்து கீழே இறக்கி விமான நிலைய போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விமான பாதுகாப்பு சட்டம் மற்றும் சக பயணிகளுக்கு இடையூறு செய்தல் உள்பட சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, பயணி சந்தீப் குமாரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்….

Related posts

வேலூர் மாவட்டத்தில் பிறந்து 8 நாட்களே ஆன சிசு கொலை: 2 பேர் கைது

சொத்தை எழுதி தர மறுத்ததால் ஆத்திரம் விஏஓ ஆபீசில் தந்தை, தங்கை சரமாரி வெட்டிக் கொலை: விவசாயி கைது

வண்டலூர் உயிரியல் பூங்காவில் யானை தந்தம் திருடிய 4 பேர் கைது