நாகை : நடுக்கடலில் நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 6 மீனவர்கள் படுகாயமடைந்துள்ளனர். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் நாகை செருதூர் மீனவ கிராமத்தை சேர்ந்த 6 மீனவர்கள் கோடியக்கரை தென் கிழக்கே மீன்பிடித்து கொண்டிருந்தபோது அங்கு வந்த 15 இலங்கை கடற்கொள்ளையர்கள் மீனவர்களின் கழுத்தில் கத்தியை வைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் மீனவர்களிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான மீன்களை பறித்ததாகவும், தடுக்க முயன்ற போது கூர்மையான தூண்டில் கம்பிகளை உடலில் மாட்டி சித்தரவதை செய்து தண்ணீரில் தள்ளி விட்டு தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து கடலில் இருந்த மற்ற மீனவர்களின் உதவியுடன் கரை திரும்பிய காயமடைந்த 6 மீனவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்….