நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு

அரியலூர், மார்ச் 30: செந்துறை அருகே நடந்து சென்ற பெண்ணிடம் 7 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள இலுப்பையூர், சிவன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி பொன்னம்மாள்(64). டேங்க் ஆப்ரேட்டர். நேற்று இவர், அங்குள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டி மின் மோட்டாரை இயக்குவதற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த மர்ம நபர், பொன்னாம்மாள் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு, இரு சக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து பொன்னம்மாள் செந்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து செயின்பறித்த மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Related posts

தெற்கு வெங்காநல்லூரில் மகளிர் சுகாதார வளாகம் திறப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கோரிக்கை ரேஷனில் தட்டுப்பாடின்றி பொருட்கள் வழங்க வேண்டும்

ராஜபாளையம் அருகே நீர்நிலைகளில் கொட்டப்படும் குப்பைகள்