நாகப்பட்டினம் மாவட்டத்தில் மேலபாதி என்ற ஊரில் இரட்டை ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார். அனைத்து ஆலயத்திலும் ஒரு மூலவர் மற்றும் ஒரு உற்சவர் இருப்பார்கள். ஆனால் ஒரு ஆலயத்தில் ஒரே தெய்வம் இரட்டையராக இருப்பது மிகவும் அரிது. இத்தலத்தில் உள்ள இரட்டை ஆஞ்சநேயரை வழிப்பட்டால் எப்பேற்பட்ட இன்னலும் தீர்ந்துவிடும் என்பது நம்பிக்கை. மேலும் இங்கு வந்து வழிபடுவோருக்கு இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது ஐதீகம், மற்றும் சனி தோஷம், ராகு, கேது, போன்ற தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை. இப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது நிலங்களில் அறுவடைப் பணியைத் துவக்குவதற்கு முன் இவ்வாலயத்திற்கு வந்து இரட்டை ஆஞ்சநேயரைக் வணங்குவார்கள். பிறகு தான் தங்களுடைய பணிகளை ஆரம்பிக்கின்றனர்….