தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்!: சூப்பர் மார்க்கெட்டின் அஸ்திவாரத்தில் 100 குழந்தைகள் உட்பட 240 பேரின் எலும்பு கூடுகள் கண்டெடுப்பு..!!

இங்கிலாந்தில் உள்ள சூப்பர் மார்க்கெட்டின் அஸ்திவாரத்தில் 100 குழந்தைகள் உட்பட 240 பேரின் எலும்பு கூடுகள் சிக்கியதால், தொல்பொருள் துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இங்கிலாந்து நாட்டின் ஹாவர்போர்ட்வெஸ்டில் இருந்த சூப்பர் மார்க்கெட் கடந்த 2013ம் ஆண்டு முதல் மூடப்பட்டு கிடக்கிறது. தற்போது அந்த டிபார்ட்மெண்ட் ஸ்டோரை மேம்படுத்துவதற்காக அதனை இடித்து அப்புறப்படுத்தும் பணி நடைபெறுகிறது. அப்போது அஸ்திவாரத்தை தோண்டும் போது, மனித எலும்பு கூடுகள் ஆங்காங்காங்கே கிடந்தன. மேலும் பல அடிகள் தோண்டியபோது 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் எலும்பு கூடுகள் உட்பட 240க்கும் மேற்பட்டவர்களின் எலும்பு கூடுகள் கிடந்தன.

Related posts

சென்னையில் TN-RISE நிறுவனத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்..!!

சாமி படத்தை வைத்துக் கொண்டு ராகுல் காந்தி விவாதத்தால் மக்களவையில் அனல் பறந்தது..!!

ஈஃபிள் கோபுரத்தை விட பெரியது!!.. உலகின் மிக உயரமான ரயில்வே பாலம்!