தோணுகால் பஞ். மக்கள் யூனியன் ஆபீசை முற்றுகை

கோவில்பட்டி, ஜூலை 21: கோவில்பட்டி அடுத்த தோணுகால் பஞ். மேலத்தெருவை சேர்ந்த பொதுமக்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தோணுகால் பஞ்சாயத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணிபுரியும் வேலையாட்களில் ஒரு பிரிவுக்கு மட்டும் முன்னுரிமை அளித்து மற்ற தரப்பினர்களுக்கு இடையே வேலை பார்க்கும் இடத்தில் பிரிவை உருவாக்குகிறார்கள். இதனால் மன வருத்தமும், மன உளைச்சலும் ஏற்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் நாங்கள், மகாத்மா காந்தி ஊரக வேலை திட்ட அட்டை, ரேஷன் கார்டு ஆகியவற்றை திருப்பி அளிக்க உள்ளோம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Related posts

நண்பரை குத்தி கொல்ல முயற்சி வாலிபருக்கு 10 ஆண்டு சிறை சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுபாட்டில் வைத்திருந்த 2 பேர் கைது

சாலையோரம் குவிந்து கிடந்த மாணவர்களின் சீருடைகள்: போலீசார் விசாரணை