திருவாரூர்: திருவாரூர் அஞ்சுகம் அம்மையார் நினைவிடத்தில் நேற்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் தாயார் அஞ்சுகம் அம்மையார் நினைவிடமானது திருவாரூர் அருகே காட்டூரில் இருந்து வருகிறது. அங்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 27ம் தேதி நினைவு தினத்தையொட்டி திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம். அதன்படி நேற்று 61வது நினைவு தினத்தையொட்டி போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அங்குள்ள மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் முரசெலி மாறன் உள்ளிட்ட அனைவரது உருவ படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு அறுசுவை உணவுகளையும் வழங்கினர்.