தொழிலாளி விஷம் குடித்து சாவு

பூதப்பாண்டி,செப். 27: பூதப்பாண்டியை அடுத்துள்ள சங்கரலிங்கம்பாறை பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முத்து ராஜ் (62). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு. இந்நிலையில் கடந்த 20 நாட்களாக வேலையில்லாமல் வீட்டில் இருந்துள்ளார். இந்த மன வேதனையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத சமயம் ஏதோ விஷ மருந்து அருந்தி மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். அவரை மீட்டு பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், முத்து ராஜ் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை