கிருஷ்ணகிரி, பிப்.10:கெலமங்கலம் அடுத்த கவுதாளம் பகுதியை சேர்ந்தவர் நாத்(32), கூலி தொழிலாளி. கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து வெளியே சென்ற நாத் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது தாய் பச்சம்மா கெலமங்கலம் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.