தொழிலாளி மாயம்

கிருஷ்ணகிரி, பிப்.10:கெலமங்கலம் அடுத்த கவுதாளம் பகுதியை சேர்ந்தவர் நாத்(32), கூலி தொழிலாளி. கடந்த 2 நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து வெளியே சென்ற நாத் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி அவரது தாய் பச்சம்மா கெலமங்கலம் போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை