கிருஷ்ணகிரி, செப்.17: கிருஷ்ணகிரி அடுத்த மோரமடுகு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் ராமன் (32), கூலித்தொழிலாளி. கடந்த 6ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ராமன், மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுபற்றி செல்வராஜ் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.