தொழிலாளி தற்கொலை

சிவகாசி, ஜன.23: சிவகாசி பி.கே.எஸ்.ரோடு பகுதியைச் சேர்ந்தவர் துரைச்சாமி மகன் ஆறுமுகசாமி(48). இவர் சிவகாசியில் நெகிழிப்பை தயாரிக்கும் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர், நேற்று சிவகாசி அருகே அய்யம்பட்டி அருகே சென்னையில் இருந்து செங்கோட்டை சென்று கொண்டிருந்த பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகின்றது. இது குறித்து திருவில்லிபுத்துார் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை