கோவை: கோவை செட்டிபாளையம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் பொன்ராஜ் (38). கூலி தொழிலாளி. இவரது மனைவி கோமதி (28). இவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. சம்பவத்தன்று கணவர், மனைவி இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் கோமதி அதிருப்தியடைந்து தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால், மன உளைச்சலில் இருந்து வந்த பொன்ராஜ் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, செட்டிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.