தொழிலாளியை தாக்கிய 2பேர் கைது

தூத்துக்குடி, மே20: தூத்துக்குடியில் தொழிலாளியை வழிமறித்து தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்ட ரவுடி உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். தூத்துக்குடி தபால் தந்தி காலனி பகுதியில் உள்ள ஒரு கோவிலின் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்தவர்களை சிப்காட் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரி பகுதியை சேர்ந்தவர்களான ஜெயம் மகன் வெற்றிவேல் முருகன் (எ) சின்னத்தம்பி (27) மற்றும் செல்வகுமார் மகன் உத்தண்டுராஜ் (21) ஆகியோர் என்பதும், அவர்கள் அப்பகுதியில் வந்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வெற்றிவேல் முருகன் (எ) சின்னத்தம்பி மீது ஏற்கனவே சிப்காட் காவல் நிலையத்தில் கொலை வழக்கு உட்பட 2 வழக்குகளும், புதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் என 3 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை