தொண்டி அருகே பழுதான சாலையை சீரமைக்க கோரிக்கை

தொண்டி, ஏப்.11: தொண்டி அருகே தார்ச்சாலை முற்றிலும் பெயர்ந்து பயனற்றதாக உள்ளது. இதனால் புதிய சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தொண்டி அருகே தளிர் மருங்கூர் ஊராட்சியில் தெற்கு தளிர் மருங்கூர் பேருந்து நிறுத்தம் முதல் பாகன வயல் வழியாக டி.புதுக்குடி பேருந்து நிறுத்தம் செல்லும் தார் ரோடு 20 வருடங்களுக்கு முன்பு போடப்பட்டது. இச்சாலை தற்போது முற்றிலும் பெயர்ந்து மேடு பள்ளமாக உள்ளது. வேலைக்கு செல்வோர், பள்ளிக்கு செல்வோர் என கிராம மக்கள் அதிகமானோர் தினமும் செல்கின்றனர். இரவு நேரங்களில் டூவீலரில் செல்வோர் விபத்தில் சிக்குகின்றனர். இச்சாலையை சீர் செய்ய கோரி ஊராட்சியில் பலமுறை மனு கொடுத்தும் பயன் இல்லை.

உடனடியாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர். இப்பகுதி மக்கள் கூறியது, தளிர் மருங்கூர் ஊராட்சியில் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் சாலை மிகவும் மோசமாக உள்ளது. மழை பெய்தால் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இரவு நேரங்களில் டூவீலரில் செல்வோர் கஷ்டப்படுகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக சாலையை புதிதாக அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி