தொகுதி வளர்ச்சிக்கு முக்கியத்துவம்: ஐட்ரீம்ஸ் மூர்த்தி பிரசாரம்

தண்டையார்பேட்டை: ராயபுரம் தொகுதி  திமுக வேட்பாளர் ஐட்ரீம்ஸ் மூர்த்தி நேற்று காலை  வண்ணாரப்பேட்டை என்.என்.கார்டனில் தொடங்கி பல்வேறு பகுதிகளில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பொதுமக்களிடையே அவர் பேசுகையில், ‘தமிழகத்தில் அதிமுக  ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு அச்சாரமாக ராயபுரத்தில் எனக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள். இதே தொகுதியில் வசிப்பவன் நான். உங்கள் பிரச்னைகளை எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம். உடனடியாக சரிசெய்து கொடுப்பேன். தொகுதி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். அதிமுக வேட்பாளர் பொதுமக்களிடம் பேசுவதில்லை, ஆனால் மைக் முன்பு பேசுவது தான் வழக்கமாக உள்ளது. மீனவ சமுதாயத்தை சேர்ந்தவர் என்று கூறுகிறாரே தவிர, மீனவ மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை, வாக்கி டாக்கி வாங்குவதில் ஊழல் செய்துள்ளார். சீன இன்ஜின் வாங்கியதில் முறைகேடு செய்துள்ளார். இப்படி இவரால் மீனவர்கள் முதல் வியாபாரிகள், பொதுமக்கள் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், திமுக சொல்வதை தான் செய்யும். செய்வதை தான் சொல்லும். ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பிரச்னையை முன்னின்று தீர்க்கும்,’ என்றார்.  ராயபுரம் தொகுதி பொறுப்பாளர் கவிஞர் காசிமுத்து மாணிக்கம், மாவட்ட பொறுப்பாளர் இளைய அருணா, பகுதி செயலாளர் செந்தில், வட்ட செயலாளர் சேகர் உள்ளிட்ட திமுகவினர், கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் உடன் சென்று வாக்கு சேகரித்தனர்….

Related posts

சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஏ.ஸ்டாலின் திமுகவில் இருந்து சஸ்பெண்ட்

சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்திற்கு 4 ஆண்டு இழுத்தடிப்புக்கு பின்பே ஒப்புதல்: செல்வப்பெருந்தகை கண்டனம்

டெங்கு, மலேரியாவை கட்டுப்படுத்த வேண்டும்: எடப்பாடி வலியுறுத்தல்