தாம்பரம்: தாம்பரம் சட்டமன்ற தொகுதி அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் கரிகாலன், தொகுதி முழுவதும் தினசரி வீதி வீதியாக சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். செல்லும் வழியெங்கும் பொதுமக்கள் மலர்தூவி, ஆரத்தி எடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அதன்படி, நேற்று சேலையூர் பகுதியில் உள்ள பல்வேறு நலச்ச்சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ‘தொகுதியில் உள்ள பிரச்னைகள், தேவைகள் பற்றி நன்கு அறிந்தவன் நான். எனக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்தால், தொகுதி வளச்சிக்கு பாடுபடுவேன். உங்களில் ஒருவனாக இருந்து மக்கள் சேவையாற்றுவேன். உங்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து உடனுக்குடன் நடவடிக்கை எடுப்பேன். சாலை, குடிநீர், மின் விளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படும்,’ என்றார். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளை சந்தித்து இந்த ஒரு முறை குக்கர் சின்னத்திற்கு ஆதரவு அளிக்குமாறு கரிகாலன் கேட்டபோது, ‘இந்த முறை எங்கள் குடும்பத்தினரின் ஒட்டுமொத்த ஓட்டும் உங்களுக்கு தான்’ என அவர்கள் உறுதியளித்தனர். பிரசாரத்தின் போது, அமமுகவை சேர்ந்த கோரல் வெங்கடேசன், தேமுதிக தாம்பரம் நகர செயலாளர் செழியன், அமமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்….