தையல் தொழிலாளர்கள் சங்க ஆலோசனைகூட்டம்

தூத்துக்குடி, ஜூன் 8: தூத்துக்குடியில் மின்சார தையல் தொழிலாளர்கள் சங்க ஆலோசனைக்கூட்டம் நடந்தது. தூத்துக்குடி ஐஎன்டியூசி அலுவலகத்தில் இந்திய தேசிய மின்சார தையல் தொழிலாளர்கள் சங்கக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் கதிர்வேல் தலைமை வகித்தார். இதில், தலைவர் ஜோசப் மனோகர், செயலாளர் சண்முகம், பொருளாளர் வினோத் மற்றும் சேகர், அன்டோ, சூசை, செல்வக்குமார், ஜெயபாண்டி, ஞானராஜ், மிக்கேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மின்சார தையல் தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’