தேவதானபட்டியில் விஷம் குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை: போலீசார் விசாரணை

தேவதானப்பட்டி, ஜூலை 4: தேவதானப்பட்டியில் விஷம் குடித்து கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தேவதானப்பட்டி ஆர்எஸ் புரத்தைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி(50). இவர் அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டில் தகராறில் ஈடுபட்டுவந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் தங்கப்பாண்டி மதுவில் விஷமருந்தை கலந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதனையடுத்து தங்கப்பாண்டியை அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தங்கப்பாண்டி இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து இறந்த தங்கப்பாண்டியின் தாயார் பொன்னுத்தாய் தேவதானப்பட்டி போலீசில் புகார் தனது மகன் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை