முசிறி, பிப்.14: முசிறி அருகே கோழி திருடிய 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். முசிறி அடுத்த வெள்ளூர் சாலப்பட்டியை சேர்ந்த கோவிந்தசாமி மகன் இளவரசன் (35). இவர் வளர்த்து வரும் கோழிகளை தனது வீட்டின் வெளியே அடைத்து வைத்திருந்தார். நள்ளிரவில் பைக்கில் வந்த இருவர் கோழிகளை பிடித்துள்ளனர். சப்தம் கேட்டு இளவரசன் கண் விழித்தவர் கூச்சலிட்டவாறு அவர்களை துரத்தியுள்ளார்.
அப்போது இருவரும் கோழி மற்றும் இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு தப்பி ஓடினர். இதனையடுத்து இளவரசன் முசிறி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டதில் கோழிகளை திருட வந்தவர்கள் துளையாநத்தம் சேர்ந்த சக்தி (24) மேலவெள்ளூரை சேர்ந்த சுதர்சன் (25) ஆகிய இருவர் என தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.