தேர்தல் விதி மீறிய 9 வழக்குகள் பதிவு வேலூர் மாவட்டத்தில் ஒரே நாளில்

வேலூர், மார்ச் 31: தேர்தல் விதிமீறல் தொடர்பாக வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகள், புதுச்சேரி ஒரு தொகுதி என 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும அவரது ஆதரவாளர்கள், பொது இடங்களிலும், தனியார் இடங்களிலும் அனுமதியின்றி சுவர் விளம்பரம் ஒட்டுவதோ அல்லது சுவரொட்டிகள், ஸ்டிக்கர்கள் ஓட்டுவதோ, சுவர்களில் எழுதுவதோ கூடாது என்று தேர்தல் ஆணையம் தனது நடத்தை விதிகளில் கூறியுள்ளது. ஆனாலும் தினமும் தேர்தல் நடத்தை விதிமீறல் தொடர்பான புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் நேற்று முன்தினம் காலை முதல் இரவு வரை லத்தேரி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், மேல்பாடி காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், பேரணாம்பட்டு காவல் நிலையத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் 2 வழக்குகளும், குடியாத்தம் டவுன் காவல் நிலையத்தில் 3 வழக்குகளும் என மொத்தம் 9 வழக்குகள் அனுமதியின்றி அரசியல் கட்சிகள் சுவர் விளம்பரம் வரைந்ததற்காக பதிவு செய்யப்பட்டுள்ளன.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை