தேர்தல் பறக்கும் படையினரால் ரூ.53.72 லட்சம் பணம், பொருள் பறிமுதல்

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 19ம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நேர்மையாகவும், நியாயமாகவும் நடைபெற, மாதிரி நடத்தை விதி அமலில் உள்ளது. தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 1,650 பறக்கும் படையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த 29ம் தேதி வரை ரூ.40,40,831 பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. 15 லேப்டாப்கள், 40 மொபைல் போன்கள், 19 துண்டுகள், 140 பித்தளை குத்து விளக்குகள் என ரூ.12,57,080 மதிப்புள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 74,090 மதிப்பிலான மதுபான பாட்டில்கள் என ரூ.53,72,001 பணம் , பொருட்கள்  கைப்பற்றப்பட்டுள்ளது.    …

Related posts

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை