தேரிழந்தூர் முதல் அசிக்காடு வரை சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

குத்தாலம்: குத்தாலம் அருகே தேரிழந்தூர் முதல் அசிக்காடு வரை உள்ள சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் ஒன்றியம் தேரிழந்தூர் முதல் அசிக்காடு வரை உள்ள இடையேயான சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு தார்சாலையானது ஜல்லி கற்கள் பெயர்ந்து மிகுந்த அளவில் சேதமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது.மேலும் சாலையில் பள்ளம், மேடுகளும் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளுக்கு இந்த சாலை பயணிகளுக்கு மிகுந்த அளவில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. சாலையில் அரிமானம் ஏற்பட்டு உள்ளதால் இரவு நேரங்களில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.அசிக்காடு, மறையூர், முருகன்தோட்டம், செங்குடி, பூவாலை, வழுவூர், மங்கைநல்லூர் உள்ளிட்ட கிராம மக்கள் மற்றும் மாணவ-மாணவிகளுக்கு கல்லூரிகளுக்கு செல்லவும் விவசாயிகள் தங்களுக்கான பணிகளை மேற்கொள்ளவும், இந்த சாலை பிரதான சாலை.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையை புதிதாக அமைத்து தர இந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இந்த சாலையில் மின்கம்பம் மற்றும் மின் விளக்குகள் இல்லை என்பதும் இதனால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு இரவு நேர பயணம் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது….

Related posts

குழந்தை திருமணம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்: சென்னை ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் எச்சரிக்கை

யூடியூபர் டி.டி.எஃப். வாசனிடம் பறிமுதல் செய்யப்பட்ட காரை மீண்டும் ஒப்படைக்கக் கோரிய வழக்கு: மனுவை தள்ளுபடி செய்து மதுரை மாவட்ட நீதிமன்றம் உத்தரவு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் திருமாவளவன் சந்திப்பு