தேமுதிக பொதுக்கூட்டம்

தர்மபுரி : தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா மற்றும் 19ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, நேற்று தர்மபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் குமார் வரவேற்றார். மேற்கு மாவட்ட செயலாளர் விஜயசங்கர் முன்னிலை வைத்தார். கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ அழகாபுரம் மோகன்ராஜ் பேசினார். கூட்டத்தில் புல்லட் மாரிமுத்து, தர்மபுரி ஒன்றிய துணை சேர்மன் தம்பி ஜெய்சங்கர், மாவட்ட அவை தலைவர்கள் தங்கவேல், உதயகுமார், மாவட்ட பொருளாளர்கள் சீனிவாசன், ராமச்சந்திரன், மாநில தொழிற்சங்க துணை செயலாளர் விஜய் வெங்கடேஷ், மாவட்ட துணை செயலாளர் சுரேஷ், நகர செயலாளர் தேவ தேவன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related posts

ஒட்டன்சத்திரத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் மாவட்ட மக்கள் வருவாய் துறை கோரிக்கை மனுக்களுக்கு என்னென்ன ஆவணங்கள் அளிக்க வேண்டும்: கலெக்டர் விளக்கம்

பாலமரத்துப்பட்டியில் இன்று ‘பவர் கட்’