தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கு தேர்வு

தேனி, டிச. 20: தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களை நேரடியாக நியமிக்க எழுத்துத் தேர்வு வருகிற டிச.24ம் தேதி நடக்க உள்ளது. தேனி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் மூலம், தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அனைத்து தொடக்க கூட்டுறவு சங்கங்களில்(பணியாளர் மற்றும் மாணவர் கூட்டுறவு பண்டக சாலைகள் மற்றும் மாவட்ட மத்திய கூடடுறவு வங்கிகள் தவிர) காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்ப எழுத்துத் தேர்வு வருகிற டிச.24ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேனி நாடார் சரசுவதி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடக்க உள்ளது.

இத்தேர்வில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேனி மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணையதள முகவரியான https://thenidrb.net ல் பதிவு எண் மற்றும் கடவுச் சொல்(பிறந்த தேதி) தரவுகளை உள்ளீடு செய்து எழுத்துத் தேர்வுக்கான தேர்வுக்கூட ஹால்டிக்கட்டினை பதிவிறக்கம் செய்து தேர்வில் கலந்து கொள்ளலாம். இத்தகவலை தேனி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய தலைவரும் தேனி மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளருமான ஆரோக்ய சுகுமார் தெரிவித்தார்.

Related posts

நிலக்கடலையில் கூடுதல் மகசூல் வேளாண்துறையினர் அட்வைஸ்

திருத்தங்கல்லில் மண்ணெண்ணெய் குண்டு வீசிய வழக்கில் 5 பேர் கைது

பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு ஆபத்து