தேனி : தேனியில் இறந்ததாக கருதி அடக்கம் செய்ய முயன்ற போது, உயிருடன் மீட்கப்பட்ட குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தாமரைக்குளம் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியமேரி என்பவரின் குழந்தை நேற்று இறந்துவிட்டதாக கூறி அரசு மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.ஆனால் அடக்கம் செய்ய முயன்ற போது குழந்தைக்கு இதயத்துடிப்பு இருந்தது தெரியவந்தது. உடனடியாக தேனி அரசு மருத்துவமனையில் குழந்தை அனுமதிக்கப்பட்டு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி தற்போது குழந்தை உயிரிழந்துவிட்டது. இதனிடையே உயிருடன் இருந்த குழந்தை இறந்துவிட்டதாக கூறி பெற்றோரிடம் ஒப்படைத்த 2 மருத்துவர்கள் மற்றும் 4 செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. …