திருச்செங்கோடு: தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, உஞ்சனை ஊராட்சியில் உறுதிமொழி மற்றும் விழிப்புணர்வு பேரணி நடத்தப்பட்டது. விவேகானந்தா பார்மசி கல்லூரியின் இளைஞர் செஞ்சிலுவை சங்க மாணவிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி பாலுசாமி தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் முருகானந்தன் வரவேற்றார். நம்ம திருச்செங்கோடு அறக்கட்டளை நிறுவனர் சேன்யோகுமார், உஞ்சனை பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். வாக்காளர்களின் கடமைகள், அவர்களது உரிமைகள் பற்றி பேரணியில் பதாகைகள் ஏந்தி சென்று மாணவிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். ஒவ்வொருவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்றும், வாக்களிக்க யாரிடமும் பணம் பெறக்கூடாது, ஜனநாயக கடமையை தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. பாலுசாமி நன்றி கூறினார்.