திண்டுக்கல் ஜூலை 9: கோவையில் அமெச்சூர் பவர் லிப்டிங் அசோசியேசன் சார்பில் மாநில அளவிலான டெட் லிப்ட், பெஞ்ச் பிரஸ் போட்டி நடந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். சப் ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. இதில் 75 கிலோ பிரிவில் திண்டுக்கல்லை சேர்ந்த மகாராஜன் தமிழ்நாடு அணி சார்பில் கலந்து கொண்டார். அவர் சப்ஜூனியர் பிரிவில் 2ம் பரிசு, ஜூனியர் பிரிவில் 3ம் பரிசு, சீனியர் பிரிவில் 2ம் பரிசு பெற்று, ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றார். இதையடுத்து அவர் தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வாகி உள்ளார். அவரை பயிற்சியாளர்கள் மற்றும் சக வீரர்கள் பாராட்டினர்.
தேசிய பவர் லிப்டிங் போட்டிக்கு திண்டுக்கல் மாணவர் தேர்வு
previous post