தேசிய திருநங்கைகள் தினம் காங்கிரஸ் ரயில் மறியல் ஏராளமானோர் கைது

உடுமலை, ஏப். 16: ராகுல்காந்தியின் எம்பி பதவியை பறித்து ஜனநாயக படுகொலை செய்த மத்திய அரசை கண்டித்து, திருப்பூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மாபெரும் ரயில் மறியல் போராட்டம் உடுமலையில் நேற்று மாலை நடந்தது. மாவட்டத்தலைவர் கே. தென்னரசு தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ காளித்து கலந்து கொண்டார். மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கோவிந்தராஜ், ஜனார்த்தனன், கிட்டுசாமி, கண்ணுசாமி, நகரத்தலைவர் கோ. ரவி, மாவட்டத் துணைத் தலைவர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரத்தலைவர்கள் கனகராஜ், செல்வக்குமார், வெங்கடேஷ், சின்னச்சாமி, செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். ரயில் மறியல் செய்ய முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

Related posts

வத்திராயிருப்பு அருகே ரூ.11 லட்சத்தில் வன வேட்டை கும்பலை கண்காணிக்க ‘வாட்ச் டவர்’

தமிழ்நாடு நாள் பேச்சு, கட்டுரை போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு

வடமாநில வாலிபர் சடலம் மீட்பு