தேசிய அளவிலான வினாடி வினா போட்டியில் அரசு பள்ளி மாணவர்கள் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்

 

கோவை, செப். 15: ஜி 20 மாநாட்டை முன்னிட்டி ஆர்.பி.ஐ சார்பாக அரசு பள்ளி மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் கோவை காந்தி மாநகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களான ராம்பிரியா மற்றும் ஆகாஷ் கலந்துகொண்டனர். இதில் வட்டம், மாவட்டம், மாநிலம், தென்மாநில அளவிளான போட்டியில் முதல் பரிசை வென்று தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

தேசிய அளவிலா போட்டி மும்பையில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. தமிழ்நாடு, டெல்லி, ஹரியானா, மத்யபிரதேஷ், பிஹார், அசாம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் மொத்தம் 12 பேர் கலந்துகொண்டனர். வீடியோ மற்றும் ஆடியோ, பசர், நெகடிவ் பசர், ஸ்பீட் ஆகிய சுற்றுகளில் தமிழகம் சார்பாக கலந்துகொண்ட மாணவர்களான ராம்பிரியா மற்றும் ஆகாஷ் சிறப்பாக விளையாடி வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்