போடி, ஜூன் 9: போடி-தேனி சாலையில் போடியைச் சேர்ந்த செந்தில், குடோன் அமைத்து தேங்காய் மண்டி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மாலை கடையில் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிந்தனர். அப்போது, அங்கு வந்த 6 அடி நீள நாகபாம்பை பார்த்து அலறியடித்தபடி ஓடினர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் 2 மணி நேரம் போராடி பாம்பினை பிடித்து வனத்திற்குள் விட்டனர்.