தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கொரோனாவால் உயிரிழந்த தந்தையின் மெழுகு சிலையை, மணமேடையில் இருந்த தங்கைக்கு திருமண பரிசாக அவரது அண்ணன் வழங்கிய வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. தந்தையை கண்ட மணப்பெண், அவரது தாய் மட்டுமின்றி திருமணத்திற்கு வந்த உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் ஆனந்த கண்ணீர் விட்டனர்.