தென்மண்டல டேக்வாண்டோ போட்டி மதுரை மாணவர்கள் வெற்றி

மதுரை, அக்.20: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கிடையே தென் மண்டல அளவிலான டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில், தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி மற்றும் அந்தமானில் இருந்து 2,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் மதுரை மாவட்ட மாணவர்கள் கலந்து கொண்டு 2 வெள்ளி, 3 வெண்கல பதக்கம் வென்றனர். 14 வயதுக்குட்பட்ட 41 கிலோ எடை பிரிவில் மாணவி வைஷ்ணவி, 14 வயதுக்குட்பட்ட 33 கிலோ எடை பிரிவில் ராகவி ஆகியோர் வெள்ளி பதக்கம் வென்றனர். 19 வயதுக்குட்பட்ட 73 கிலோ எடை பிரிவில் மாணவிகள் அலமீன் ஆயிஷா சகானா, வாசுதேவி மற்றும் 19 வயதுக்குட்பட்ட 63 கிலோ எடை பிரிவில் மாணவர் ஆதித்யா ஆகியோர் வெண்கல பதக்கம் வென்றனர். இதன்மூலம் நவம்பர் மாதம் நொய்டாவில் நடக்கவிருக்கும் சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையிலான தேசிய டேக்வாண்டோ போட்டிக்கு வைஷ்ணவி மற்றும் ராகவி ஆகியோர் தேர்வாகியுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை அமெச்சூர் மதுரை மாவட்ட டேக்வாண்டோ சங்கத்தலைவர் நாராயணன், செயலாளர் கார்த்திக் மற்றும் மதுரை மாவட்ட பயிற்சியாளர்கள் பிரகாஷ் குமார், கவுரிசங்கர், விஜய் அருணாச்சலம் பாராட்டினர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்