தென்னம்பாளையம் சந்தைக்கு சுரைக்காய் வரத்து அதிகரிப்பு

திருப்பூர், ஜூன் 6: திருப்பூரில், பல்லடம் சாலை தென்னம்பாளையம் பகுதியில் உழவர் சந்தை மற்றும் தினசரி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் காய்கறிகளை கொண்டு வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக காய்கறிகளின் விளைச்சல் மற்றும் அறுவடையில் பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் மார்க்கெட்டிற்கு கடந்த சில தினங்களாக காய்கறிகளின் வரத்து மிகவும் குறைவாக இருந்தது. இந்நிலையில் தற்போது காய்கறி வரத்து சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. சந்தைக்கு சுரைக்காய் வரத்து அதிகமாக இருந்தது. இதனால் 15 கிலோ எடை கொண்ட சுரைக்காய் கடந்த சில தினங்களுக்கு முன்பு 400 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் 300 ரூபாயாக விலை குறைவாக விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் புடலங்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளின் வரத்து அதிகமாக இருந்தது.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்