தென்குவளவேலி அரசு பள்ளியில் காமராஜர் பிறந்த தின ஓவியப்போட்டி

 

வலங்கைமான், ஜூலை 13: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் தென்குவளவேலி அரசு உயர்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்த தின போட்டிகள் நடைபெற்றன. ஆண்டுதோறும் காமராசர் பிறந்த தினமான ஜூலை 15 ஆம் தேதி கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது.அந்த வகையில் இந்த ஆண்டு வருகிற திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு தென்குவளவேலி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி ஆகியவை நடத்தப்பட்டன.

இதுகுறித்து பள்ளியின் தலைமைஆசிரியர்சூரியகுமார்(பொ) கூறியதாவது; ஆண்டுதோறும் எங்கள் பள்ளியில் காமராஜர் பிறந்த தின விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது வழக்கம்போல் இந்த ஆண்டும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. திங்கட்கிழமை நடைபெறும் கல்வி வளர்ச்சி நாள் விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர் மூலம் பரிசுகள் வழங்கப்பட உள்ளது மேலும் அன்று மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது என்றார்.

Related posts

முன்னாள் ராணுவவீரர் வீட்டில் 15 சவரன் திருட்டு மர்ம ஆசாமிகளுக்கு வலை குடியாத்தத்தில் துணிகரம்

இன்ஸ்டாகிராமில் பழகிய சிறுமிக்காக மல்லுக்கட்டிய 2 வாலிபர்கள் மோதலில் ஈடுபட்ட 10 பேர் மீது வழக்கு ஒடுகத்தூர் அருகே பரபரப்பு

உயர்அழுத்த மின்கம்பி மீது உரசிய ரயில்வே கம்பத்தால் எக்ஸ்பிரஸ் ரயில் நிறுத்தம் பயணிகள் அவதி வேலூரில் லாரி மோதியதால்