தென்காசியில் மார்க்சிஸ்ட் ஆர்ப்பாட்டம்

 

தென்காசி,ஜூன் 3:தென்காசியில் இஸ்ரேலை கண்டித்து மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. புதிய பேருந்து நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். திமுக நகர செயலாளர் சாதிர், நகர்மன்ற துணைத்தலைவர் கேஎன்எல் சுப்பையா, இந்திய கம்யூனிஸ்ட் சுப்பையா, கிட்டப்பா, தமுமுக மாவட்ட தலைவர் யாக்கூப், விசிக மண்டல துணை செயலாளர் சித்திக், முஸ்லீம் லீக் மாநில செயலாளர் முகம்மது அலி, பேராசிரியை சங்கரி, லெனின், ஆசிரியர் மாரியப்பன், சலீம், அயூப்கான் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநில குழு உறுப்பினர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை