தெங்கம்புதூரில் ₹28 லட்சத்தில் நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை மையம்

நாகர்கோவில், டிச.31: நாகர்கோவில் மாநகராட்சி சார்பில், தெங்கம்புதூர் உரக்கிடங்கு அருகே ₹28 லட்சத்தில், நாய்களுக்கான கருத்தடை சிகிச்சை மையம் கட்ட மேயர் மகேஷ் அடிக்கல் நாட்டினார். துணை மேயர்மேரி பிரின்சி லதா, கவுன்சிலர் ரமேஷ், சுகாதார ஆய்வாளர் ராஜா, திமுக மாநகர செயலாளர் ஆனந்த், பகுதி செயலாளர்கள் சேக் மீரான், ஒன்றிய செயலாளர் லிவிங்ஸ்டன், வட்ட செயலாளர்கள் ஜெய கிருஷ்ணன், குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து குஞ்சன்விளையில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் முகாமில் மேயர் மகேஷ் மனுக்களை வாங்கினார். இதில் ஆணையர் ஆனந்த் மோகன், உதவி ஆணையர் சுதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை