பாலக்கோடு, செப்.25: பாலக்கோடு ஒன்றியம், அமானிமல்லாபுரம் பகுதியில் ஸ்வச் பாரத் திட்டத்தின் கீழ், தூய்மை பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் மீனா, நேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு, ஊராட்சி மன்ற தலைவர் மதிவாணன் முன்னிலை வகித்தார். இதில் எனது கிராமத்தை நான் தூய்மையாக வைத்துக் கொள்வேன் என உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சரவணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கற்பகம், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் பெருமாள் , வட்டார ஒருங்கிணைப்பாளர் அருள்மணி, சுகாதார ஊக்குநர், மகளிர் சுய உதவி குழுக்கள், பொதுமக்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் திராளாக கலந்து கொண்டனர்.