தூய்மை இந்தியா உறுதிமொழி ஏற்பு

திருவாடானை,செப்.26: திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில், \”தூய்மை இந்தியா\” குறித்து உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரி முதல்வர் பழனியப்பன் தலைமை தாங்கினார். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மணிமேகலை இந்த நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்திருந்தார். இதில் கலந்து கொண்ட கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவியர்கள் அனைவரும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை மீண்டும் பயன்படுத்த மாட்டோம் எனக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் கல்லூரி பேராசிரியர்கள் செல்வம், சுரேஷ், சரவணன், பாலமுருகன், செல்வி, இருளவேணி மற்றும் மாணவ,மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

வத்திராயிருப்பில் மருத்துவமனையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

தீயில் மரங்கள் எரிந்து நாசம்

சித்தர் கோயில் ஜெயந்தி விழா