தூத்துக்குடி, செப். 25:தூத்துக்குடி சிதம்பரநகர் சாலையில் வரும் 29ம் தேதி ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடக்கிறது. சென்னை உள்ளிட்ட சில மாநகரங்களில் ஞாயிற்றுக்கிழமை முக்கிய சாலைகளில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாநகரில் முதல்முறையாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இதற்காக ஜெயராஜ் ரோடு, சிதம்பரநகர் பிரதான சாலை ஆகியவற்றை மாவட்ட கலெக்டர் இளம்பகவத் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் சிதம்பரநகர் பிரதான சாலையில் வரும் 29ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை ஹேப்பி ஸ்ட்ரீட் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான், டவுன் ஏஎஸ்பி. மதன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.