தூத்துக்குடி:தென்னிந்திய திருச்சபை தூத்துக்குடி- நாசரேத் திருமண்டலம் உருவானதின் 20வது ஆண்டை முன்னிட்டு ஸ்தோத்திர பண்டிகை வரும் 25ம் தேதி நாசரேத்தில் நடக்கிறது. இதை முன்னிட்டு தூத்துக்குடியில் நேற்று முன்தினம் மாலை ஸ்தோத்திர பவனி நடந்தது. தூத்துக்குடி கால்டுவெல் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் இருந்து தொடங்கிய பவனியை திருமண்டல ‘லே’ செயலாளர் நீகர் பிரின்ஸ் கிப்ட்சன் கொடியசைத்து துவக்கிவைத்தார்.